விஜயின் ‘லியோ’ திரைப்பட முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு.

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் 19ம் தேதி தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு நேற்று (Oct .12) அரசாணை வெளியிட்டது.

இதனால், வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை  அதாவது ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வீதம் ஒளிபரப்பலாம்’’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள், ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இது குறித்தும் குழப்பம் நீடித்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திரையரங்குகளில் ‘லியோ’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கி, இறுதிக் காட்சி அதிகாலை 1.30 மணிக்கு முடிவடைகிறது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை சரியான முறையில் மற்றும் மீறல் இல்லாமல் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *