யாழ் வல்வெட்டித்துறையில் 50 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு கடற்கரையில் மர்ம பொதி ஒன்று இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராணுவ உளவுத்துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான கேரள கஞ்சா மீட்கப்பட்டது, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதி எவ்வாறு கடற்கரைக்கு வந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா மீட்கப்பட்டதால், அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலை எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தங்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *